tamilnadu

மின் நுகர்வோருக்கென புதிய இணையதளம்! புதிய தகவல்

சென்னை, மே 20- தமிழ்நாடு மின்சார வாரி யம் நுகர்வோருக்கு மின்  இணைப்பு வழங்குவதற்கு என்றே https://app1. tangedco.org/nsconline/ என்ற புதிய இணைய தளத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.

புதிய மின் இணைப்பு மட்டுமின்றி அதன் பொது தகவல்கள் உள்ளிட்ட வற்றையும் இந்த இணைய தளம் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

புதிய மின் இணைப்பு வழங்குதல் அல்லது கொடுத்த மின் இணைப்பை  ரத்து செய்தல், தற்காலிக மின் இணைப்பு, பெயர் மாற்றம், விண்ணப்பப் படி வங்கள், விண்ணப்ப நடை முறைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தின் மூலம் மேற்  கொள்ளலாம். ரத்து செய்  யப்பட்ட மின் இணைப்புக் கான பணத்தைப் பெறுவது என அனைத்தையும் இந்த  இணையத்தின் மூலம் நுகர்வோர் செய்து கொள்ள லாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நுகர்வோருக்கு விண்ணப்பித்த மூன்று முதல்  ஏழு நாட்களுக்குள் அவர்  களுக்கு புதிய மின் இணை ப்பு வழங்க வேண்டும் என்று  சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது.

மேற்கொண்டு மின் இணைப்பு வழங்க தாம தித்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பரிந்து ரைத்து உள்ளதால், தற் போது மின் இணைப்பு வழங்க தாமதமானால் அதற்குரிய காரணத்தை நுகர்வோருக்கு தெரி விக்க வேண்டும் என்று  கூறப்பட்டது. இவற்றை யெல்லாம் நடைமுறைப் படுத்தும் வகையில் இந்த  புதிய இணைய சேவை யானது அமல்படுத்தப்பட் டுள்ளது.