tamilnadu

img

அன்னை தெரசா பல்கலை.க்கு புதிய துணைவேந்தர் நியமனம்

சென்னை,மே 28-கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தராக பேராசிரியை வைதேகி விஜயகுமாரை நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அன்னை தெரசா பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியை வைதேகி விஜயகுமாரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேராசிரியை வைதேகி விஜயகுமார் அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். இவர் அன்னை தெரசா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். இவர் கனடா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியையாகவும் இருந்துள்ளார்.