திருவள்ளூர், டிச.14- சரக்குகளை கையாளும் சேப் எக்ஸ்பிரஸ் புதிய முனையம் பெரிய பாளையம் அருகே சனிக்கிழமை யன்று (டிச.14) திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அருகே பனப்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் சேப் எக்ஸ்பிரஸ் தனியார் சரக்கு கையா ளும் முனையம் கட்டப்பட்டது. இதனை எஸ்.கே.ஜெயின் நிறுவன துணை தலைவர் மற்றும் வினித் கன்னூஜியா முதன்மை விற்பனை அலுவலர்ஆகியோர் திறந்துவைத்த னர். இதில் பி.கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 100 மில்லியன் டன் பொருட்களை கையாளும் இறக்குமதி ஏற்றுமதி செய்யும் சேப் எக்ஸ்பிரஸ் தனியார் நிறுவனம் 32 மாநிலங்களில் 1100 இடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொருட்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் உள்ளூர் மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெற இருக்கிறார்கள். மேலும் மறைமுக மாக 500 க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு உள்ளதாகவும் நிர்வாகத்தி னர் தெரிவித்துள்ளனர்.