சென்னை, மார்ச் 15- தமிழகத்தில் 2.20 கோடி இருசக்கர வாகனங்கள், 23 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 8 ஆயிரம்தனி யார் பேருந்துகள், 21 ஆயிரம் அரசுப் பேருந்துகள் ஆகியவை பயன்பாட் டில் உள்ளன. இந்த வாகனங்களை இயக்குவோர் மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர். புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை யும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஓட்டுநர் உரிமத்தை நேரடியாக பெற்றுவிட முடியாது. முன்னதாக எல்எல்ஆர் என்று அழைக் கப்படும் பழகுனர் உரிமத்தை விண்ணப்பித்து பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது இருப்பிடச் சான்றுக்கு ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட சிலவற்றையும், பள்ளிச்சான்று, பிறப்பு சான்று போன்றவற்றை வயதை நிரூபிப்பதற்கு சமர்பிக்க வேண்டும். பிறகு குறிப்பிட்ட கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். அதனைத்தொடர்ந்து விண்ணப்பதாரருக்கு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் விண்ணப்பதாரர் வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு எல்எல்ஆர் வழங்கப்படும். எல்எல்ஆர் பெற்ற 30 நாட்களுக்கு பிறகு நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தவுடன் ஆர்டிஓ அலுவலகத்தில் சோதனைகள் நடத்தப்படும். ஆனால் ஒருசில இடங்களில் எல்எல்ஆர் கேட்டு விண்ணப்பிப் போரிடம் பெயரளவிற்கு மட்டுமே தேர்வு நடத்தப்படுவதாக கூறப்படு கிறது. இதனால் சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது தேவை யற்ற விபத்துக்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் எல்எல்ஆர் பெறுவ தற்கான வழிமுறைகளை கடின மாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் 71,431 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 17,218 பேர் உயிரிழந்தனர். அப்போது இந்தியா விலேயே அதிக உயிரிப்பு நடக்கும் மாநிலமாக தமிழகம் இருந்தது. இதையடுத்து சாலைவிபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் வாகன விபத்துக்கள் படிப்படியாக குறையத் துவங்கியது. கடந்த ஆண்டு 57,228 விபத்துக்கள் நடந்தது. இதில் 10,525 பேர் உயிரிழந்தனர். அதன் ஒருபகுதியாக எல்எல்ஆர் எடுப்பவர்களுக்காக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதில் போக்குவரத்து சட்டங்கள், விதி முறைகள், சமிக்ஞைகள் போன்ற வற்றின் விபரங்களை கூடுதலாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். பிறகு அதனடிப்படையிலேயே தேர்வு நடத்தப்படும். அப்போது சாலைவிதி கள் குறித்து முழுவதும் தெரிந்திருந் தால் மட்டுமே வெற்றி பெற முடி யும். இதன்மூலம் சாலை விபத்துக் கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.