சென்னை, ஜூலை 6 - தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை-2019ன் மீது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மெய்ப்பொருளியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கருத்துரையாற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் வே. வசந்திதேவி, புதிய கல்விக் கொள்கையின் பாதகங்களை எடுத்துரைத்தார். உயர்க்கல்வி முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கப்பட உள்ளதையும், கல்வி முழுமையாக நீட் போன்ற மையப்படுத்தப்பட்ட முறையாக மாறும் என்றார். மதச்சார்பின்மைக்கு எதி ரான அம்சங்கள் பாடத்திட்டங்களில் புகுத்தப் பட உள்ளதையும் எடுத்துக் கூறினார். கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், புதிய கல்விக் கொள்கை யால் மாநில உரிமை பறிபோகும். கல்வி தொடர்பான எந்த ஒரு முடிவையும் மத்திய அரசே எடுக்கும். கல்லூரிகள் பல்கலைக் கழ கமாய் மாற்றப்பட்டு ஏழை எளிய மாண வர்கள் அடுத்தடுத்த நிலைக்கு செல்லாமல் வடிக்கட்டப்படுவார்கள் என்றார். பல்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற இக்கருத்தரங்க நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி.அருள் மொழிச்செல்வன் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். நிகழ்வில் மெய்ப்பொருளியல் துறை தலைவர் பேரா. சீனிவாசன், துணைப் பேராசிரியர் முனைவர். ஏ.டி.ரேவதி உள்ளிட்டோர் பேசினர்.