tamilnadu

புதிய குற்றவியல் சட்ட அமலாக்கம்; பாஜக அரசின் ஜனநாயக படுகொலை!

சென்னை, ஜூலை 2 - மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

மோடி அரசு தனது கடந்த ஆட்சிக் காலத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங் களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய புதிய சட்டங்களை கொண்டு வந்தது. 

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவசரமாக சட்ட அமைச்ச ருக்கு பதிலாக உள்துறை அமைச்சரை வைத்து, மசோதாவை சமர்ப்பித்து எவ்வித  விவாதமும் இன்றி ஜனநாயக விரோதமாக இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டது. மோடி அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்கனவே வன்மையாக கண்டித்திருந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348-ஆவது பிரிவு, சட்டங்கள் அனைத் தும் ஆங்கிலத்தில் இருக்கவேண்டுமெனக் கூறுகிறது. ஆனால், மேற்படி மூன்று சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத ஒலியமைப்பில் இந்தி மொழியில் அரசி யலமைப்பிற்கு விரோதமாக உள்ளது. மேலும், பல்வேறு மொழிகள் பேசும் மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சி தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதி ராகவும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

ஆங்கிலேயர் காலத்து தேசதுரோக சட்டப்பிரிவை (124 A - IPC)  நீக்கிவிட்டு அதை விட கொடுமையான சட்டப்பிரிவை புதிய தண்டனைச் சட்டத்தில் சேர்த்துள்ளது. மேலும், விசாரணைக்காக கைது செய்யப் படும் குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் ரிமாண்ட் என்பதை 90 நாட்கள் என நீட்டித் திருப்பதும், ரிமாண்ட் செய்யும் அதிகா ரத்தை நிர்வாகத்துறை நடுவருக்கு (தாசில் தார்) வழங்கியிருப்பதும் காவல்துறைக்கு பல் வேறு பிரிவுகளில் எல்லையில்லா அதிகா ரங்களை வழங்கியும், சட்டரீதியில் ஜனநா யக உரிமைகளை மறுத்தும், போலீஸ் ராஜ்ஜியத்தை உருவாக்கவும் புதிய சட்டங் கள் முனைந்துள்ளன. 

பழைய சட்டத்தில் உள்ள மதவெறிக்கு எதிரான பிரிவுகள் நீக்கப்பட்டு மதவெறி மற்றும் வெறுப்புப் பேச்சிற்கு ஆதரவாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதவெறி சக்திகளுக்கும் கார்ப்பரேட்மயத் திற்கும் ஆதரவாகவே மேற்படி மூன்று சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன.  இச்சட்டங் களினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிறு பான்மை மக்களையும், மோடி அரசின் எதேச் சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுபவர்களையும் குறிவைத்து தாக்கு வதற்கும், நீதித்துறையில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடும் இச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 

மேற்படி சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள் ளன. பல்வேறு மாநிலங்களில் வழக்கறி ஞர்களும், பொதுமக்களும் போராடி வரு கின்றனர். தமிழகத்தில் இரண்டு நாட் களாக மாநிலம் முழுவதும் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராடி வருகின்ற னர். எனவே, ஒன்றிய பாஜக அரசு பொதுமக்களின் நலன் கருதி மேற்படி மூன்று சட்டங்களை  நடைமுறைப்படுத்து வதை திரும்பப்பெற வேண்டுமெனவும், நாடாளுமன்றத்தில் இச்சட்டங்கள் குறித்து விரிவான ஜனநாயகப் பூர்வமாக விவாதம் நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

;