tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பட்டாபிராமில் இன்று மின் தடை

அம்பத்தூர், மே 18- வடசென்னையில் திங்கட்கிழமை (மே 19) பாட்டாபிராம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.என் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

18 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, மே 18-  தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று; வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆவடியில் கட்டுமான  சங்க கிளை துவக்கம்

அம்பத்தூர், மே 18- சென்னை பெருநகர கட்டுமான தொழிலார்கள் சங்கத்தின் அண்ணா நகர் கிளை துவக்க விழா மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி கிளைத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் என்.நடராஜன் சங்கக் கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் பெயர் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார். ஆவடி பகுதி தலைவர் இ.கெங்காதுரை, செயலாளர் எம்.ராபர்ட்ராஜ், டி.ராமமூர்த்தி, ஆர்.சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக துணைத்தலைவர் ஏ.ஏழுமலை வரவேற்றார். என்.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

சூரப்பட்டில் ரூ.146 கோடியில்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

சென்னை, மே 18- சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடி யில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தர விட்டுள்ளது. சென்னை மாதவரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில், நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், கடந்த 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையம், பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு, சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர், ஆவடி கனரக வாகன தொழிற்சாலை பகுதியில் உள்ள 12 குடியிருப்பு பகுதிக ளுக்கும், சூரப்பட்டு மற்றும் சண்முகாபுரம் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. 59 ஆண்டுகள் பழமையான இந்த நிலையத்தில் தற்போது தினமும் 7 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே சுத்தி கரிக்கப்படுகிறது. இதனால், இந்த பழைய கட்டமைப்பை இடித்துவிட்டு, நாளொன்றுக்கு 47 மில்லி யன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலை யத்தை அமைக்கவும், இந்த நிலையத்துக்கு புழல் ஏரியிலிருந்து தினமும் 52 மில்லியன் லிட்டர் நீரை கொண்டு செல்லும் கட்ட மைப்பை ஏற்படுத்தவும் சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டிருந்தது. அதன்படி, 47 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரூ.81.95 கோடி யில் அமைப்பது, புழல் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 52 மில்லியன் லிட்டர் குடி நீரை எடுக்கும் கட்டமைப்பை ரூ.12.04 கோடி யில் அமைப்பது, இந்த நிலையத்தை 10 ஆண்டுகளுக்கு ரூ.52.63 கோடி செலவில் பராமரிப்பது என மொத்தம் ரூ.146.62 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதை கவனமாக பரிசீலித்த அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதியை வழங்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக  மது, குட்கா விற்பனை: 4 பேர் கைது

சென்னை, மே 18- சென்னையில் சட்ட விரோதமாக மது, குட்கா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் பெரியமேடு, என்.எச். ரோடு 4வது தெருவில் கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பரஞ்சோதி (65), சசிகலா (39 ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல் பிராட்வே ரோட்டில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்த போது அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக மகேஷ்குமார் குப்தா, சங்கர்லால் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹான்ஸ், கூலிப் உள்பட சுமார் 55 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், பணம் ரூ.4,160 பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய 20 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுதில்லி, மே18-  நாட்டில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த இந்த நோட்டில் மகாத்மா காந்தி படம் இருக்கும். இது போன்ற நோட்டுகளை ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி சனிக்கிழமையன்று வெளி யிட்டது.  இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்ட தாக இருக்கும். புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என்ற தகவலையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.