சென்னை, ஜன. 28- தொகுதி பங்கீடு குறித்து திமுக வுடனான பேச்சு வார்த்தை திருப்தி யாக அமைந்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள் ளார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்ட ணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதி கள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஞாயிறன்று (ஜன.28) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், அஜய் குமார், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றகுழு தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ கத்தில், 40 தொகுதிகளில் வெற்றி பெறு வதற்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் பாஜக, அதிமுகவை வீழ்த்துவது குறித்தும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், 2024 மக்களவைத் தேர்த லுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்க ளில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப் படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்” என்று அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.