சென்னை, ஜூலை 3- தமிழக வெற்றிக் கழகம் சார் பில் 2-வது ஆண்டாக மாணவர் களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.
இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடந்த விழாவில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத் தேர்வு மாநில அரசுகளின் உரிமை களுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எனது கருத்து” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டி யலில் இருந்தது. அதை எப்பொ ழுது ஒன்றிய அரசு பொதுப் பட்டி யலுக்கு கொண்டு வந்ததோ, அப் போதுதான் இந்த சிக்கல் ஏற்பட் டது.
ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை, அடிப்படை யில் கல்வி கற்றலுக்கு எதிரான விஷ யமாக நான் பார்க்கிறேன். ஒவ் வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்துவிட்டு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல் லோராலும் சமமாக எழுத முடியும்? அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை யோசித்துப் பாருங்கள்.
மூன்றாவதாக, நீட் தேர்வு குளறு படிகள் பற்றி நாம் நிறைய செய்தி களை வாசித்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக உள்ளது.
இந்தப் பிரச்சனைகளுக்கு எல் லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கொண்டு வந்த சட்டப் பேரவை தீர்மானத்தை நான் மனப் பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு இதன் மீது காலதாமதம் செய் யாமல் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பு கொடுக்க வேண் டும்” என்றார்.
மேலும், “நீட் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநி லப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்,” என்றும்; “மாநில அரசு களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சிறப்பு பொதுப் பட்டியலை உரு வாக்க வேண்டும்” என்றும் விஜய் கேட்டுக்கொண்டார்.