தேசிய கல்விக் கொள்கை 2019 திரும்பப் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகத்தில் ஆர்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஜீ.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர், வட்டச் செயலாளர் பி.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.