tamilnadu

img

புதுச்சேரியில் தேசிய இ-விதான் செயலி தொடக்கம்

புதுச்சேரியில் தேசிய இ-விதான் செயலி தொடக்கம்

புதுச்சேரி, ஜூன் 9 -  புதுச்சேரி சட்டப்  பேரவையை காகிதம் இல்லாத சட்டப்பேரவை யாக மாற்றும் தேசிய இ-விதான் செயலி துவக்க விழா திங்களன்று (ஜூன் 9)  நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலை வர் செல்வம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற விவகாரங் கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு தேசிய இ-விதான் செயலியை துவக்கி வைத்தார். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்  நுட்பம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் காகிதம் இல்லாத பயன்பாடு மற்றும் கணினி வேகம் ஆகியவை இடம் பெற்றுள்ளது”என்றார். தொழில்நுட்ப  வளர்ச்சியில் வேகம் அவசியம் சிறுவர்கள் கூட இன்று செய்திகளை தங்கள்  செல்போன் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அத்தியாவசிய தேவை யாகிவிட்டது. அப்படி இருந்தால்தான் நாடு வேகமான வளர்ச்சி பெற முடியும் என்று கூறிய முதலமைச்சர், மக்களின் தேவைகளை அறிந்து அரசுத்துறை அதிகாரிகள் விரைந்து திட்டத்தின் பயன்கள் கிடைத்திட செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய். சரவண குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செயலர் உமங் நருலா, கூடுதல் செயலர் சத்திய பிரகாஷ், சட்டப்பேரவை செயலர் தயாளன் மற்றும் அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள், அதி காரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.