tamilnadu

img

தேசிய பேரிடர் மேலாண்மை ஒத்திகை

விழுப்புரம், ஆக. 5- விழுப்புரம் மாவட்டம் தேசிய பேரிடர் மேலாண் மைக் குழு, தீயணைப்புத் துறை, காவல்துறை சார்  பில் பேரிடர் நிவாரண செயல்முறை விளக்க ஒத்திகை நிகழ்ச்சி மரக்கா ணம் அருகே அழகன்குப்பம், எக்கியார்குப்பம் கிராமங்க ளில் மாவட்ட ஆட்சியர் சுப்பிர மணியன் தலைமையில் நடைபெற்றது.  அழகன்குப்பம் கிராம  முகத்துவாரப் பகுதியில், வெள்ளத்தில் 30 பயணி களுடன் சிக்கிக்கொண்ட பேருந்தை பொறுப்பா ளர்கள், தீயணைப்புத் துறையினர் படகுகள், மீட்பு  உபகரணங்கள் மூலம் மீட்பது குறித்த ஒத்திகை  நடைபெற்றது. தொடர்ந்து  வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட கால்நடைகளை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பது போன்ற ஒத்திகை யும், 80 கிலோ மீட்டர் வேகத்  தில் காற்று வீசினால் செல் போன் கோபுரம் சாய்ந்து விழுந்து தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டால், மற்ற வர்களை எவ்வாறு தொடர்பு  கொள்வது, சாலைகளில் மரங்கள் விழுந்து நகரத்து டன் தொடர்பு கொள்ள இய லாத நிலையில் கிராம மக்களை படகுகளை கொண்டு எவ்வாறு மீட்பது குறித்தும் பேரிடர் மீட்புக் குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பேரிடர் காலத்தில் வீட்டின்  சுவர் இடிந்து விழுந்து, அதில் சிக்கிக் கொண்டவர் களை மீட்பது, தாழ்வான  பகுதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து அதில்  சிக்கியவர்களை படகுகள் உதவியுடன் மீட்டு பாது காப்பான இடத்துக்கு அழைத்துச் செல்வது, தீ விபத்தில் சிக்கிக்கொண்ட 25 நபர்களை எவ்வாறு காப்பாற்றுவது, உயர மான கட்டிடங்களில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்புத் துறையினர் கிராம மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் பேரிடரில் சிக்கி இறந்த விலங்குகளினால் எந்தவித நோய் தொற்றும் பரவாமல், அவற்றை அப் புறப்படுத்துவது குறித்து கால்நடை துறையினர் மூலம்  பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது்.  இதில் துணை ஆட்சியர்  கள் கவிதா (விழுப்புரம்), விஷ்ணு பிரியதர்ஷினி (விழுப்புரம்), விஷ்ணுவர் தனி (திருப்பூர்), உதவி  இயக்குனர்கள் (ஊராட்சி கள்) ரத்தினமாலா (கள்ளக்  குறிச்சி), ஜோதி (விழுப்புரம்) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

;