tamilnadu

6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை, ஏப். 15-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார்.இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், எம். நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு வரும் ஜூன் 11 ஆம் தேதிக் குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், அவசரமாக பரோல் தேவை என்றால் உயர்நீதிமன்ற விடுமுறைக் கால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு அனுமதி அளித்தனர்.

;