சென்னை, ஜூன் 28- தமிழ்நாட்டில் விவசாயிகள் கூட்டு றவு சங்கங்களில் பெற்று தவணை தவ றிய கடனுக்கான வட்டி யை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி சட்ட மன்றத்தில் வலி யுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டு றவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ பங்கேற்றுப்பேசியதாவது:
இந்த ஆண்டு விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, நமது ‘இந்தியா’ கூட்டணி சார்பில் சில வாக்கு றுதிகளை அளித்திருந்தோம். அதில், ‘இந்தியா’ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் கடனைத் தள்ளு படி செய்வோம் என்பதும் ஒன்றாகும். இதனை நம்முடைய முதலமைச்சர் கொர டாச் சேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்பு ரையில் கூறினார்.
தேர்தல் நடந்த பின்னர் வாக்கு எண்ணி க்கையின் முடிவுகளை அறிவிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டது வரலாற்றிலேயே இந்த தேர்தலில் தான். வாக்கு எண்ணிக்கைக்கு நீண்ட காலம் பிடித்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் இருந்தனர். இந்தக் காலத் தில் விவசாயிகள் வாங்கிய கடனானது தவணைத் தவறிய கடனாக மாறிவிட்டது. வட்டி கட்ட வேண்டிய ஒரு கட்டாயம் ஏற் பட்டுள்ளது. ஆகவே வட்டியை மட்டும் நம்முடைய அரசு தள்ளுபடி செய்யுமா? என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தி யில் இருக்கிறது.
ஆகவே விவசாயிகளின் உணர்வை இந்த அவையில் நான் பதிவு செய்கி றேன். எனவே முதலமைச்சர் கவ னத்திற்கு கொண்டு சென்று வட்டியை மட்டும் தள்ளுபடி செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், “காலம் கடந்து செல்லவில்லை என்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.