tamilnadu

img

சிதம்பரத்தில் ரூ.1.10 கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்த நகர்மன்றத் தலைவர்

சிதம்பரத்தில் ரூ.1.10 கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்த நகர்மன்றத் தலைவர்

சிதம்பரம், ஜூன் 29- சிதம்பரம் நகராட்சி பகுதியில் குளம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை நகர மன்ற தலைவர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.  சிதம்பரம் நகராட்சி உட்பட்ட மந்த கரை பகுதியில் உள்ள தட்சன் குளத்தை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரி நவீன படுத்தப்பட்டுள்ளது. அதே போல் கனகசபை நகரில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் கலந்து கொண்டு தட்சன் குளம் மற்றும் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜய ராகவன், அப்பு சந்திரசேகர், இந்துமதி அருள், ஏ.ஆர்.சி.மணிகண்டன், அசோகன், சரவணன், தில்லை மக்கின், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பா ளர் மக்கள் அருள், ஆணை யாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.