தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களே! ஹிட்லர், முசோலினி, மனு, கோல்வால்கர், கோட்சே போன்றவர்களின் கருத்துக்கு அடிமை என்பதில் சிலருக்கு வெட்கம் இல்லாத போது.. புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான்" என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.