திருவள்ளூர், ஏப் 17- ஊத்துக்கோட்டை அருகிலுள்ள வாழவந்தான் கோட்டையில் அகற்றப்பட்ட தீண்டாமை சுவர் அடித்தளத்தின் மீது, மீண்டும் தீண்டாமை சுவர் எழுப்புவதை உடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஏப்.17), ஊத்துக்கோட்டை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அருகில், கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழ்ந்தான் கோட்டையில் சுமார் 50 ஆண்டுகளாக 75 க்கும் மேற்பட்ட பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளின் பொதுவழிப்பாதையை தனியார் நிறுவனம் பழங்குடியினர் வாழும் பகுதியை சுற்றிலும் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ஆகியோரி டம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், காத்திருக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலை யில் 2022 ஆகஸ்ட் 15 அன்று வாழவந்தான் கோட்டையை சுற்றி எழுப்பியிருந்த தீண் டாமை சுவரை மாவட்ட நிர்வாகம் இயந்தி ரங்களை கொண்டு அகற்றியது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இந்த சூழலில் பாஸ்கர் அவென்யூ என்ற தனியார் மனை பிரிவு நிறுவனம், அப்பாவி பழங்குடி இன மக்களை பயன்படுத்தி மீண்டும் பொதுப்பாதையை மறித்து, ஏற்க னவே எழுப்பப்பட்டு பல்வேறு போராட்டங் களுக்கு பிறகு அகற்றப்பட்ட தீண்டாமை சுவர் மீது, மீண்டும் புதிய தீண்டாமை சுவரை எழுப்பியுள்ளது. இதற்கு காரணமாக உள்ள பாஸ்கர் அவென்யூ நிறுவனத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடியாக தற்போது எழுப்பப்பட்டு வரும் தீண்டாமை சுவரை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஏப் 17), ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.மனுவை பெற்றுக்கொண்ட வட்டச்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு, ஒன்றிய செயலாளர் கே.முருகன், சிஐடியு நிர்வாகி முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.