tamilnadu

img

வெள்ள நிவாரண நிதி வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு கண்டனம்

சென்னை, ஜன. 3 - வரலாறு காணாத மழை-வெள்ளத் தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி யிருக்கும் தமிழக மக்களுக்கு, உரிய நிவாரண நிதியை வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அர சைக் கண்டித்து, ஒன்றிய அரசு அலு வலகங்கள் அமைந்துள்ள சென்னை  சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மாநிலச் செயலாளர் கே. பாலகிரு ஷ்ணன் தலைமையில் புதனன்று காலை நடைபெற்ற இந்தப் போராட்ட த்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். மிக்ஜம் புயல் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மக்களும், குமரிக்கடலில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் திரு நெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் வரலாறு காணாத மழை-வெள்ளப் பாதிப்பு களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

வாழ்விடங்கள், குடியிருப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், கடை கள் மற்றும் வியாபார நிறுவனங் கள், சிறுகுறு தொழில் நிறுவனங் கள், விவசாயம், மீன்பிடித் தொழில், உப்பளங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசமடைந்துள்ளன.  இந்நிலையில், புயல் மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாக வழங்கிட வேண்டுமென்று, பிரதமரை சந்தித்து தமிழக முதல்வர் நேரில் வலியுறுத்தியபோதும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்காமல் ஒன்றிய அரசு அலட்சிய மாக உள்ளது. எனவே, இந்த அலட்சிய த்தைக் கண்டித்தும், தமிழக அரசு கோரிய ரூ. 21 ஆயிரம் கோடி பேரி டர் நிவாரண நிதியை உடனடி யாக வழங்கக்கோரியும்  மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிமுற்றுகை போராட்டம் நடத்தியது.

இதில்  ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.