சென்னை, ஆக. 20 - ‘குரங்கம்மை’ எனப்படும் ‘எம்பாக்ஸ்’ (Mpox) தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நட வடிக்கையாக பொது சுகாதார அவசர நிலையை கடந்த ஆகஸ்ட் 14 அன்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
தமிழகத்திலும் பொது சுகாதாரத்துறை உஷார்படுத்தப் பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், “ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணிகளை கண் காணிக்க சென்னை விமான நிலையத்தில் ஆக.20 முதல் முகாம் தொடங்கப்படு கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பய ணிகள் கண்காணிக்கப்படு வார்கள்” என்று தெரிவித்துள் ளார்.
எம்பாக்ஸ் 1970-ல் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதன் முதலாக மனிதர்களிடம் வைரஸ் பரவியது கண்டறியப்பட்டது. எம்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால், அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங் கள் தோன்றுமோ அதேபோல கொப்புளங்கள் வரும். கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலி யும் இருக்கும்.
அந்த கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும். தொற்று ஏற் பட்டு 5-ல் இருந்து 21 நாட்களில் அதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். நுரையீரல் பாதிப்பு, மூளைக் காய்ச்சல், பார்வை குறை பாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். மனிதர்களிட மிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நோய், தொற்று ஏற்பட்ட வரின் எச்சில் மற்றும் விந்து வழி யாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலும் குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவ லாம்.