சென்னை,மே 11- வடசென்னையில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 23.50 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த பணியினை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) மேற்கொண்டுள்ளது.
இந்த நவீன சந்தையில் ‘ பசுமையான ‘காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட் கள் விற்பனை செய்ய 2 தளங்கள் அமைக்கப் படுகிறது.தரைத் தளத்தில் காய்கறி, பழக்கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் பகுதி ஒதுக்கப்படுகிறது. இதற் காக 28 கடைகளும் பொது மக்கள் காத்திருப் பதற்காக ஒரு பகுதியும் கட்டப்படுகிறது. முதல் தளத்தில உலர் உணவு, மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக் கான பொருட்கள் விற்பனை செய்யும் கடை கள் 36 அமைகிறது.2-வது தளத்தில் பொது மக்கள் வசதிக்காக 41 கடைகள் செயல்பட வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சந்தைக்கு வரும் பொது மக்கள் வசதிக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. 85 மோட்டார் சைக்கிள்களும், 58 கார்க ளும் நிறுத்தக் கூடிய வகையில் வசதியாக வாகன நிறுத்துமிடம் கட்டப்படவுள்ளது. சந்தைக்கு குடும்பமாக வந்து பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக விரிவான வசதி செய்யப்படுகிறது. பொதுமக்கள் சிரமம் இல்லாமல், நெரிசல் இல்லாமல் சந்தைக்கு செல்வதற்கு தேவையான வசதிகள் செய்யப் படுகிறது.
மெகா சூப்பர் மார்க்கெட் போல இந்த நவீன சந்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கொளத்தூர், பெரியார் நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், பூம்புகார் நகர், ரெட்டேரி, ராஜமங்கலம் விநாயகபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சந்தையால் பயனடை வார்கள. 59,390 சதுர அடியில் மிக பிரமாண்ட மாக உருவாகி வரும் சந்தையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். வட சென்னையின் ஒரு முக்கிய அங்கமாக இந்த நவீன சந்தையை உருவாக்க சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.