tamilnadu

நீட் தேர்வை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தை நாடுவோம் மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 27- நீட் தேர்வு விவகாரத்தில் தமி ழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நம்பி ஒரு பிரயோ ஜனமும் இல்லை என்றும்  தேர்வு களை ஒத்தி வைப்பது தொடர்பாக  உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா மாநில முதல்வர்களுக்கு தமிழக  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ரும் திமுக தலைவருமான மு.க.  ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதி யுள்ள கடிதம் வருமாறு:- தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  மற்றும் கூட்டு  நுழைவுத் தேர்வு  2020 எழுதும்  மாணவர்கள் எதிர்கொள்ளும் சிர மங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே நான்  இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தேர்வுகளை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை என்ப தாலும், சில மாதங்களில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை யிலுமே ஜூன் 2020 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால், நாடு முழுவதும் நிலைமை மேலும் மோச மடைந்துள்ளது. பெருந்தொற்று மட்டுமின்றி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இவற்றால், கிராமப்புறங்களும், மலைப் பகுதிகளும் பிற முக்கி யப் பகுதிகளில் இருந்து துண்டிக்  கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநி லங்களில் பொதுப் போக்கு வரத்து இன்னும் தொடங்கப்பட வில்லை. விமானம், ரயில்  போக்குவரத்தைப் பயன்படுத்திக்  கொள்ளும் வசதி பெரும்பாலான மாணவர்களுக்கு இல்லாதது டன், ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதில் நிச்சயமற்ற நிலையே நீடித்து வருகிறது. மேற்குவங்கம், மகா ராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், ராஜஸ் தான், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும்  புதுச்சேரி ஆகிய மாநில முதல மைச்சர்கள் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வு நடத்தும் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருப்பதை தாங்கள் அறிவீர்கள். மேலே விளக்கப்பட்ட கடுமை யான சிக்கல்களையும், மாண வர்களின் நல்வாழ்வையும், எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டும்  என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நமது ஒருமித்த நிலைப்பாடு, நாடு முழுவதும் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் குரலுக்கு வலுசேர்ப்பதாக இருக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.