tamilnadu

img

“பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்”

சென்னை,செப்.4- “சென்னை மாநகரப் பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணி களை அனைத்து துறை களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவு றுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், பருவமழையை எதிர் கொள்ள மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலை மையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. இதில் சென்னை மாநக ராட்சி பகுதிக்கு உட்பட்ட 22 தொகுதிகளின் எம்எல்ஏக் கள், மண்டலக்குழு தலை வர்கள், மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, நீர் வளத்துறை, மின்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஏற்கெனவே தெரிவித்த வெள்ள பாதிப்பு பிரச்சனை கள் குறித்தும், அதற்கு மாநக ராட்சி எடுத்து வரும் நட வடிக்கைகள் குறித்து அமை ச்சர்களுக்கு விளக்கப்பட் டது. அப்போது சில பிரச்ச னைகள் குறித்த மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என சில எம்எல்ஏ க்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பணிகளை விரைந்து முடிக்குமாறும் அமைச்சர் உதயநிதி அதி காரிகளுக்கு அறிவுறுத்தி னார். தொடர்ந்து அவர் பேசும் போது, “அதிகாரிகள் அனை வரும் பருவமழை முன்னெ ச்சரிக்கை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும். இந்த ஆய்வுக் கூட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் அறிக்கையாக அளிக்க இருக்கிறேன்.திட்ட ப்பணிகளுக்கான பிற துறை அனுமதிகளை முன்கூட்டியே பெற்று விட்டதாக என்னிடம் தவ றான தகவல் தெரிவிக்கப் படுகிறது. ஆனால், அதன் பிறகே அனுமதி பெறப்படு கிறது. இதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்” என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன், நீர்வளத் துறை செயலர் மணிவாசன், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி. வினய், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.