tamilnadu

img

ஒவ்வொரு வீட்டிலும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்

சின்னாளபட்டி, ஏப்.5- தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி அவர்களின் வழிகாட்ட லின்படி, ஆத்தூர் தொகுதி யில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதி காலை 6.30 மணிக்கே தேர் தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஈடுபடுவதால், திமுக தொண்டர்கள், நிர்வாகி கள், கூட்டணி கட்சியினர் உற் சாகம் அடைந்துள்ளனர்.

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் திண் டுக்கல் மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை அதிக வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சரும், திமுக மாநில துணைப் பொ துச்செயலாளருமான ஐ. பெரியசாமி உத்தரவிட்ட தோடு அதற்கான பணிகளை யும் முடுக்கிவிட்டுள்ளார்.  

 மேலும் கிளைக் கழகம் முதல் ஒன்றிய கழகம் வரை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பிரச்சாரப் பணிகளை கேட்டறிந்து வரு வதோடு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் பொ றித்த ஸ்டிக்கரை வீடு தவறா மல் கொண்டு சேர்த்திருக்க வேண்டும் என வழிகாட்டி யுள்ளார்.

இதையடுத்து திமுக நிர் வாகிகள் தொண்டர்கள் இரவு பகல் பாராது தீவிரமாக வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு கூட் டணி கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்தி ரம் சின்னம் பொறித்த வண்ண ஸ்டிக்கர்களை வீடு தவறாமல் சேகரித்து வருகிறார்கள். திராவிட மாடல் ஆட்சி நாயகன் தமி ழக அரசின் சாதனை திட்டங் கள் அடங்கிய துண்டு பிரசுரங்க ளையும் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர். இதற்கு பொது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி இ.எம்.வாஞ்சி நாதன் கூறுகையில், ‘‘அமைச் சர் ஐ.பெரியசாமி போட்டி யிடும் போதுகூட காலை 8 மணி அளவில்தான் பிரச்சா ரத்தை தொடங்குவார். தற் போது முதல்வரின் வேண்டு கோளை ஏற்று அமைச்சர் அவர்கள் காலை 6 மணிக்கே பிரச்சாரத்தை தொடங்கி எங் களை உற்சாகப்படுத்தி வரு கிறார். அதிகாலை பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார்.