tamilnadu

img

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மோசமடைந்தது

சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 13 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு விழுப்புரத்திலுள்ள அரசு மருத்துவமனையில் முதலாவதாகவும், பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார் பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் அமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நுரையிரலில் தொற்று அதிகரித்ததால்   உடல்நிலை கவலைக் கிடமானதாகவும், எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.