சென்னை, ஆக.30- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்கம் சென்னை மாவட்ட 3 ஆவது மாநாடு சனிக்கிழ மையன்று (ஆக.31) பெரிய மேட்டில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் வி.தேவன் வர வேற்றார். இணைச் செயலா ளர் நா.மனோகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலத் துணைத் தலைவர் கி.இளமாறன் மாநாட்டை துவக்கிவைத்தார். செய லாளர் ம.நாதன் அறிக்கை யையும், பொருளாளர் ம.சந்திரன் நிதிநிலை அறிக்கையையும் சமர்பித்த னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் ம.அந்தோணிசாமி, தென் சென்னை மாவட்டச் செயலா ளர் எம்.வெங்கடேசன், தமிழ்நாடு மருத்து வக்கல்லூரி இயக்ககம் முன்னாள் இணை இயக்கு நர் டாக்டர்.கே.காந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். என்.சி.செல்வராஜ் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
8 ஆவது ஊதியக்குழு வின் படி 21 மாதநிலுவை தொகையினை வழங்கிட வேண்டும், மாதந்தோறும் மருத்துவப்படி ரூ. 1000 வழங்க வேண்டும், ஓய்வூ தியர்களுக்கு வருமான வரிச்சட்டத்தில் விலக்கு அளித்திட வேண்டும், மாநிலம் முழுவதும் பயணம் செய்ய இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர், கிராமப்புற நூல கர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், 2014 க்குமுன் ஓய்வு பெற்ற அனை வருக்கும் ஆண்டு ஊதிய உயர்வுடன் நிலுவைத் தொகையும் வழங்க வேண்டும், மருத்து வக்காப்பீடு பிற மாநிலங்க ளில் உள்ளது போன்று தமிழகஅரசே ஏற்று நடத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அனைத்து மருத்துவமனை களிலும் அனைத்து சிகிச்சை களும் வழங்க வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி அர சாணை வெளியிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
சென்னை மாவட்டத் தலைவராக பி.ஏபெல், செயலாளராக ம.நாதன், பொருளாளராக என்.ராமசாமி, தணிக்கையாளராக அ.அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.