மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
வேலூர், மே 20 - மேட்டூர்-செக்கானூர் கத வணை பராமரிப்பு பணியை ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. வேலூர் மாவட்ட மக்க ளின் ஜீவாதாரமாக விளங்கிய பாலாறு மணல் கொள்ளையாலும், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டியதா லும் வறண்டு கிடக்கிறது. இதனால் மக்கள் கடந்த காலத்தில் குடிநீர் கிடைக்கா மல் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் வாயிலாக மேட்டூ ரில் இருந்து குழாய் வழியே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநி யோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர்-செக்கானூர் கதவணையில் வருடாந்திர பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து மே 22ந் தேதி முதல் ஜூன் 6ந் தேதி வரையிலான 19 நாட்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்க முடியாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் தயாநிதி விடுத்துள்ள அறிக்கையில், ஊரடங்கால் மக்கள் வீட்டில் இருப்பதால் இயல்பை விட குடிநீர் தேவை கூடுதலாக தேவைப் படுகிறது. கோடை வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் வேலூர் மாவட்டத்தில் தற்போது பராமரிப்பு பணியை மேற்கொள்வது பொதுமக்களை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கும். மக்களை தண்ணீருக்காக வெயிலில் வீதிவீதியாக அலைய வைக்கும். எனவே, பராமரிப்பு பணியை தமிழக அரசு ஒரு மாதம் ஒத்தி வைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சியரும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.