சென்னை,பிப்.10- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணி களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர் பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடை முறை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது குறித்து அவர் எழுதியிருக்கும் கடிதம் வருமாறு
“ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டது. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோ மீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களை கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப் பட்டது.
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகிய வற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகிய வற்றின் நிதி ஒப்புதல்கள் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்குப் பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் , 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய பட்ஜெட்டில் ஏமாற்றம்
2021-2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத் துக்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் ஒன்றிய துறை திட்டமாக பரிந்துரைக்கப் பட்ட நிலையில், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்தது.
ஆனால், பிரதமர் உடனான பல்வேறு சந்திப்புகளின் போது இது தொடர்பாக தான் வலி யுறுத்தி வந்த போதிலும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்தத் திட்டத்துக்கு முன் மொழிவு பொருளாதார விவ காரங்களுக்கான அமைச்சர வைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கிறது.
ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து. குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவது உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
பொருளாதார விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தை குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது. இந்தப் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற் குள் செயல்படுத்த முடியும்.
எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறை யில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறை வேற்றி செயல்படுத்தியதைப் போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை விரைந்து நிறை வேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.