சென்னை, ஜூலை 31- சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்ப தற்காக மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-வது கட்டமாக மாத வரம்-சிறுசேரி இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு ள்ளது. இதற்காக மண் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. இறுதிகட்ட மண் ஆய்வுப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், கரையான்சாவடி, கோவி லாம்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மண் பரிசோதனை நடைபெறும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:- 2-வது கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்துக்காக 250 இடங்களில் துளை போட்டு மண் மாதிரிகள் சேகரிக்க ப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதற்காக விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதங்களில் மண் ஆய்வுப் பணிகள் முடிவடையும். மண் ஆய்வு பரி சோதனை முடிந்ததும் அடுத்த ஆண்டில் (2020) மெட்ரோ ரயில் சுரங்க வழித்தட பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். வடசென்னை பகுதிகளில் பூமிக்கடியில் கடினமான பாறைகளை குடைந்து சுரங்க வழித்தடப் பாதைகள் உருவாக்கப்பட உள்ளது. சுரங்கம் தோண்டும் பணிகள் கடுமையான போராட்டங்கள் நிறைந்த தாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.