tamilnadu

img

இந்தியன் ஆயில் நிறுவனம் ஸ்ரீராம் போக்குவரத்து நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியன் ஆயில் நிறுவனம் ஸ்ரீராம் போக்குவரத்து நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தில் கடன் பெற்று வாகனம் வாங்கி ஓட்டுவோர் இந்திய ஆயில் நிறுவன பெட்ரோல் நிறுவனங்களில்  கடன் முறையில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ளலாம். இதற்கான கடன் உச்சவரம்பை மேலும் உயர்த்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவு நிர்வாக இயக்குநர் விக்யான் குமார்,  ஸ்ரீராம் போக்குவரத்து நிதி நிறுவன மேலாண் இயக்குநர் உமேஷ் ரேவகுமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.