சென்னை:
வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் கூறுகையில்,மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை எட்டும் என்பதால், இரவு முழுவதும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். ஆற்றின் ஓரங்களில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில்மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.