tamilnadu

img

பிப்.8 - சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.1- மதிமுக பொதுச் செய லாளர் வைகோ வியாழ னன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ‘‘கேரளத்தில் மக்கள் நல அரசான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மீது ஒன்றிய அரசு தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகை யிலும் 8.2.2024 அன்று புதுதில்லி யில், கேரள மாநில முதல்வர் பின ராயி விஜயன் தலைமையில் தர்ணா  போராட்டத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்த உள்ளது.

நாடு முழுவதும் அன்று இந்தக் கண்டன அறப்போர் நடைபெறும் என்றும், தமிழ் நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறிவித்துள் ளது. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், புதுதில்லி என பல மாநி லங்களிலும் பா.ஜ.க. தலைமை யிலான ஒன்றிய அரசு, தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுத்து வைத்து, கூட்டாட்சித் தத்து வத்தைத் தொடர்ந்து சிதைத்து வரும் நிலையில், இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள இப்போராட்டத்தை மறுமலர்ச்சி திமுக வரவேற்கிறது.

பாராட்டுகிறது. மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் நிர்வாகிகள் இப்போராட்டத்தினை ஆதரித்து உரையாற்றுவார்கள்’’ என்று கூறி யுள்ளார்.