tamilnadu

img

விவசாயிகள் விரோத சட்டங்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்.... திமுக, தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை:
விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் -  அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவும் தோழமை கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இந்த சட்டங்களுக்கு எதிராக சென்னையில் திங்களன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர் க.பொன்முடி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ,மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மூத்த தலைவர் அப்துல் ரகுமான்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிடர் கழக பொருளாளர் வி.குமரேசன்,  மனிதநேய கட்சியின்தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர்ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து,  மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தாமல் - குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் ‘சர்வாதிகார’மாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் தொடர்பான சட்டங்கள், “உணவுப் பொருள்களான வேளாண் விளை பொருட்களை வரம்பின்றிப் பதுக்கி” வைக்கும் சமூகவிரோத செயலுக்கு வழி செய்கிறது.

“விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலனைப்பாதுகாக்கும் அத்தியாவசிய சட்டத்தை”, சீர்குலைக்கும் புதிய திருத்தங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து”பதுக்குதல் தாராளமயமாக்கப்படுகிறது.  “விலைஉறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற் கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)சட்டத்தின்” மூலம் “கார்ப்பரேட் - ஏழை விவசாயி” என்ற சமன்பாடற்ற, ஓர்  “ஒப்பந்த வணிகம்” திணிக்கப்படுகிறது.

வர்த்தகம் பறிப்பு
விவசாயிகளின் வாழ்வும், எதிர்காலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதாரவிலைக்கும் கேடு  ஏற்படுத்தப்படுகிறது. “விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தினை”த் திணித்து, “மாநிலத்திற் குள்ளான வணிகம் மற்றும் வர்த்தகமும்” பறிக்கப்படுகின்றன.

கடும் எதிர்ப்பு
மத்திய அரசால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள; விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரானதும் - வேளாண்மை முன்னேற்றத்திற்குப் பின்னடைவைத் தரக்கூடியதும் - கூட்டாட்சித் தத்துவத்திற்குப் புறம்பானதுமான மூன்று சட்டங்களுக்கும், தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தனது கடுமையான  எதிர்ப்பைப் பதிவு செய்கிறது.மேலும், மாநிலங்களவையின் விதிகளை மீறி நிறைவேற்றியிருக்கும் இந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும்  மத்திய பா.ஜ.க. அரசுக்கும் - அவற்றை ஆதரித்திருக்கும் மாநில அ.தி.மு.க. அரசுக்கும்,  இந்தக் கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கேள்விக்குறியாகும் குறைந்தபட்ச விலை
“அத்தியாவசியத் திருத்தச் சட்டத்தில்” “12 மாதங்கள்” 100 சதவீத விலை ஏற்றம் உள்ள தோட்டக் கலை விளை பொருட்கள், 50 சதவீத விலை ஏற்றம் உள்ள அழுகாத விவசாய விளைபொருட்கள் அல்லது சராசரியாக 5 வருடங்கள் விலையேற்றம் உள்ள விளை பொருட்களுக்கு மட்டுமே “இருப்பு வரம்பு” கட்டுப்பாடு விதிக்க முடியும் என்று கார்ப்பரேட்களுக்கு சாதகமான நிபந்தனைகளை  விதித்திருப்பது, “சுதந்திரமான வேளாண் சந்தையில்” குறுக்கிட்டு, அதன்இயல்பான போக்கைப் பாதித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச விலை கூட கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.

 விவசாயிகளுக்கு பாதிப்பு
“விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு)சட்டத்தின்”மூலம்; “5 வருடம்வரைகூட கார்ப்பரேட் நிறுவனங்கள் - விவசாயிகளுடன் பண்ணை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்”, “ அதை நீட்டித்துக் கொள்ளலாம்”, “அந்த ஒப்பந்த மாதிரியை மத்திய அரசுஅனுப்பி வைக்கும்”, “ பண்ணை ஒப்பந்தத்தில் விளைபொருட்கள் விநியோகம் செய்ய வேண்டியநேரம், விலை, தரம், அளவு, தர நிர்ணயக் கட்டுப்பாடுகள்”,  “ அந்தத் தரம் பற்றி தகுதியுள்ள மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும்”, “எப்போது வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்”, “விளைபொருட்களை கொள்முதல் செய்யும் போது, வாங்கும் நிறுவனம் அப்பொருள் குறித்து கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்”, “ஒப்பந்தத்தில் பிரச்சனை எழுந்தால், அது குறித்து 90 நாட்களில் தீர்வு காணுவதற்கு, அதிகாரிகளை தலைவராகக் கொண்ட அமைப்புகள்” என்ற பிரிவுகள் அனைத்தும், குறு - சிறு - நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல், பெரும் விவசாயிகளுக்கேகூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று இக்கூட்டம் கருதுகிறது.

சந்தைகளை ஒழித்துக்கட்ட ஏற்பாடு
“விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டத்தின்”  கீழ்;  “மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்குள்ளும் மின்னணு வர்த்தகத்தை அனுமதித்து, கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் மின்னணு வர்த்தக மேடை அமைப்பது”, “விவசாயிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் நிரந்தர கணக்கு எண் கட்டாயம்”, என்பவை மாநிலத்தில் உள்ள சட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள், உழவர் சந்தைகள் போன்றவற்றை அறவே ஒழிக்கும் நடைமுறைகள் ஆகும்.

மேலாதிக்க போக்கு  
“வேளாண் விளைபொருட்கள் சந்தைப் படுத்தலை ஒழுங்குபடுத்தும் மாநில அரசின்சட்டங்கள் மேற்கண்ட சட்டத்தைக் கட்டுப்படுத் தாது”, “ஒரு குக்கிராமத்தில் உள்ள விவசாய சந்தை நிலவரம் குறித்து மத்திய அரசு

தொடர்ச்சி 3ம் பக்கம்.... 

;