சென்னை, ஆக. 19- பெண் பத்திரிகையாளர்களுக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் 57 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாச மாக, அருவருக்கத்தக்க வகையில் சங்பரிவார் மற்றும் வலதுசாரி சக்திகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் மீது பத்திரி கையாளர்கள் உள்ளிட்டோர் சுமார் 15 புகார் தெரி வித்துள்ளனர். அற்றின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாயன்று (ஆக.18) சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆணையர் அலுவலகத்தை முற்றுகை யிட புறப்பட்டபோது அனைவரையும் காவல்துறை யினர் கைது செய்து மாலை விடுவித்தனர். இந்த போராட்டம் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மற்றும் 20 பெண்கள் உள்ளிட்டு 56 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. குற்ற எண் 1283/2020 இந்திய தண்டனை சட்டம் 143, 149, 188, 269 மற்றும் குற்றவியல் சட்ட திருத்தச் சட்டம் 7(1)(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.