tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீடு: விவசாயிகளிடம் வரிவசூல் நிறுத்தம்

திருவள்ளூர், ஆக. 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டால், வரி வசூல் செய்வதை நிறுத்துவ தாக திருவள்ளூர் நகராட்சி  ஆணையர் தெரிவித்துள் ளார். திருவள்ளூர் பகுதியை சுற்றியுள்ள மாளந்தூர், ஒதப்பை, மொன்னவேடு, எறையூர், ரங்காவரம், கிருஷ்ணாபுரம், வரதாபுரம், மோகூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, சம் பங்கி போன்ற பூ வகைகளை விளைவிக்கின்றனர். விவசாயிகள் விளை பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு வந்து சந்தையில் விற்பனை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாத நிலையில், தங்க ளது சொந்த வாகனத்தில் பூக்களை கொண்டு வந்து  உழவர் சந்தையில் விற்பனை  செய்கின்றனர். இந்த விவசாயிகளிடம் திருவள்ளூர் நகராட்சி ஊழி யர்கள் தினசரி 30 ரூபாய்  கட்டாய வரி வசூலிக்கின்ற னர். இந்த வரிவசூலை கைவிட வலியுறுத்தி வியா ழனன்று (ஆக.6) நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட ஆணையர், ஊழியர்கள் தவ றுதலாக வரிவசூல் செய் துள்ளனர். இனி வரி வசூ லிக்கமாட்டார்கள் என உறுதி யளித்தார். இந்நிகழ்வில் கட்சி யின் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் கே.ராஜேந்தி ரன், வட்டச் செயலாளர் ஆர். தமிழரசன், விவசாயிகள் டி. குமார், நாகராஜ், வரதராஜன்,  சச்சிதானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.