சென்னை, ஜூன் 29 - குடிசைமாற்று வாரிய வீடுகளை முழு மானியத்தில் அரசே கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 26 குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடி யிருப்புகள் உள்ளன. 40 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த வாரிய குடியிருப்புகள் படிப்படியாக இடித்து அதே இடத்தில் புதிதாக அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பு களுக்கு பயனாளிகள் பங்களிப்பாக 2 முதல் 5.50 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது ஏற்பு யைது அல்ல. பல்லாண்டுகளாக வாரிய குடி யிருப்புகளில் வசித்து வரும் மக்களுக்கு முழு மானியத்தில் அரசு கட்டிக் கொடுக்க வேண்டும். புதுப்பித்து கட்டப்படும் வீடுகள் 400 சதுர அடிப்பரப்பில் அமைக்க வேண்டும், வாரிய குடியிருப்புகளில் தற்போது நிலவும் குடி நீர், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பிரச்ச னைகளை தீர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டும். மேலும் பூங்கா சமூக கூடம், விளையாட்டு திடல், நூலகம், உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளை ஏற்ப டுத்த வேண்டும். வீடுகள் கட்டி முடிக்கும் வரை பயனாளிகள் குடியிருப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெயர் மாற்றம் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்து வதை கைவிட வேண்டும். 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது கடற்கரையோரம் உள்ள அடுக்குமாடி வீடுகள் புதுப்பித்து கட்டித் தரப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி நொச்சிக்குப்பம், நொச்சிநகர் ஆகிய இடங்களில் மட்டுமே வீடு கள் புதிதாக கட்டித் தரப்பட்டுள்ளது. இதில் விடுபட்டுள்ள சீனிவாசபுரம், பட்டினப்பாக் கம், டுமிங்குப்பம் அடுக்குமாடி வீடுகளை இடித்துவிட்டு புதுப்பித்து கட்டித்தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.