சென்னை, மார்ச் 15- சுமைதூக்கும் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செய லாளர் சி.திருவேட்டை, சுமைப்பணி சம்மேளன மாநிலச்செய லாளர் ஆர்.வெங்கடபதி, மாநிலத்தலைவர் எஸ்.குணசேகர், துணைச்செயலாளர் எம்.ராமன் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாவட்டவாரியாக பிரதிநிதிகள் பங்கேற்றனர். டாஸ்மாக் குடோன் சுமைப்பணித் தொழிலாளர்களின் கோரிக்கை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொழி லாளர்களின் கோரிக்கை குறித்தும், மதுபான ஆலை உற்பத்தியாளர்கள் இறக்குக் கூலியை உயர்த்தி வழங்க அறிவுறுத்தக்கோரியும் மார்ச் 5 தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநரை சம்மேளனத் தலைவர்கள் சந்தித்து பேசினர். இறக்குக்கூலி என்பதில் மதுபான பெட்டி ஒன்றுக்கு 7 ரூபாயும், பீர் பெட்டிக்கு ரூ. 8, வெளி நாட்டு மதுபான பெட்டி களுக்கு 50 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை மதுபான ஆலை உற்பத்தியாளர் சங்கமும், டாஸ்மாக் நிர்வாகமும் சிஐடியு-டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களை அழைத்துப்பேசி சமூகத்தீர்வுகாண வலியுறுத்தி மார்ச் 24 மாநிலம் முழுவதும் டாஸ்மாக் குடோன்களின் முன்பு தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.