சென்னை, ஆக.3 - சென்னை பாடி மேம்பாலத்தின் மீது இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலர்கள் கழுத்தில் மாஞ்சாநூல் அறுத்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பெண் காவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க வும், இறக்குமதி செய்யவும் செப்டம்பர் 14ம் தேதி வரை காவல்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், வேப்பேரி காவல்நிலைய போக்குவரத்து காவலர் ஜெய்குமார்(42) அவரது மனைவியும், காவலருமான மகேஷ்வரி(38) ஆகி யோர் ஞாயிறன்று (ஆக.2) இரவு பாடி மேம்பாலத்தின் சென்று கொண்டி ருந்தனர். அப்போது திடீரென்று மாஞ்சா ஜெயகுமார் கழுத்தில் மாட்டி அறுத்ததால் நிலைதடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாஞ்சாநூல் பட்டம் பறக்க விடுவதை தடுக்காத வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அருண், வில்லிவாக்கம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ரிஜிஷ்பாபு ஆகியோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.