tamilnadu

img

நாளை முதல் இ-பதிவு முறை கட்டாயம்.....

சென்னை:
தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே பயணம் செல்ல இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக 30 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.மேலும், இ-பதிவு முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. வருகிற 17 ஆம் தேதி முதல் இது அமல்படுத்த இருக்கிறது. இதன்படி மாவட்டத் திற்குள்ளே பயணம் செய்யவும், மாவட்டங்களுக்கிடையே பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயமாகும்.

இ-பாஸ் அல்ல-இ பதிவு
மே 17ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், இ-ரிஜிஸ்டர் வேறு, இ-பாஸ் வேறு என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.தமிழக அரசு மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்டங்களுக்கு இடையில் மாவட்டங்க ளுக்குள் பயணிக்க இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி பரப்பப்படுகிறது.  மாறாக, மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது”என்று அந்த விளக்கத்தில் அரசு தெரிவித்துள்ளது.அதாவது இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப் பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும்.இ-பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை.இவ்வாறு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. 

;