tamilnadu

img

அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கட்டாய வசூல்

ராணிப்பேட்டை,  மார்ச் 20- ராணிப்பேட்டை மாவட் டத்தில் அரசின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் மையங்களில் சட்டவிரோதமாக ஒரு மூட் டைக்கு ரூ. 60 முதல் ரூ. 90  வரை கட்டாயமாக வசூல்  செய்யப்படுவதாக  விவசாயி கள் வேதனை தெரிவித்த னர். ராணிப்பேட்டை மாவட் டத்தில் தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ளது. விவசாயிகளிடமிருந்து நேர டியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில் மாவட்  டத்தின் பல்வேறு பகுதி களில் அரசின் சார்பில்  நேரடி நெல் கொள்முதல்  மையங்கள் திறக்கப்பட்டுள் ளது. இந்த மையங்களில் அரசு பணியாளர்கள் பணி யமர்த்தப்படுவதோடு, நெல்  தூற்றும் இயந்திரம், எடை இயந்திரம் உள்ளிட்ட வசதி கள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த  மையங்களில் பணிபுரியும்  அலுவலர்கள் இடைத்தரகர் கள், வியாபாரிகளோடு (உள்ளூர் கட்சி பிரமுகர் களோடு) கூட்டு வைத்துக் கொண்டு 40 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூட் டைக்கு ரூ. 60 முதல் 90 வரை விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்கின்றனர்.

பணம் தர மறுக்கும் விவ சாயிகளிடம் அவர்களது நெல்லை வேண்டுமென்றே மூட்டையாக்கி  குடோ னுக்கு அனுப்பாமல் அலைக்  கழிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவ தும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் முறைகேடுகள், கட்டாய வசூல் ஆகியவற்றை நுகர்  பொருள் வாணிபக் கழக  மேலதிகாரிகள் கண்டு கொள்  வதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட  நிர்வாகி ரகுபதி கூறுகையில், மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு ஆய்வுசெய்து நெல் கொள்முதல் மையங்களில் நடைபெறும் கட்டாய வசூலை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மண்டல மேலாளர் அவர்கள்  முறையாக நெல் கொள் முதல் மையங்களை கண்கா ணித்து இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பாக்கம், சென்னசமுத்திரம் பகுதி களில் உடனடியாக ஆட் களை நியமித்து நெல் கொள்  முதல் செய்ய வேண்டும். மேலப்பழந்தை, வாழப் பந்தல், மேல்புதுப்பாக்கம், தட்டச்சேரி பகுதிகளில் புதிய கொள்முதல் மையங் கள் துவக்க வேண்டும் என்றார்.