நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் போராட்டம்
சின்னாளப்பட்டி, ஜூன் 15- திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூர் ஒன்றியம் வக்கம்பட்டியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். நெடுஞ்சாலைத்துறை திண் டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைக்கு வக்கம்பட்டி மக்களின் நிலத்தை கையகப்படுத்த கடந்த ஐந்து ஆண்டுஎளுக்கு முன்பு முயற்சித்தனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொட ரப்பட்டது இந்த வழக்கில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன் றம் உத்தரவிட்டது. இதை யடுத்து ஒருசிலருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. பெரும்பாலோ ருக்கு இழப்பீடு வழங்க வில்லை. இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை வேலை யை தொடங்க முன்வற்தது. தக வலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் சூசைமேரி, பாண்டிய ராஜன், வக்கம்பட்டி ஊராட்சித் தலைவர் பேட்ரிக் பிரேம் குமார் அனைவருக்கும் இழப்பீடு வழங்கி விட்டு பணியை தொட ருங்கள் எனக்கூறி போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆத்தூர் வட்டாட்சியர் பவித்ரா, நிலஎடுப்பு வட்டாட்சியர் மீனா தேவி, திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் பேச்சு வார்ததை நடத்தினர். அப்போது கோட் டாட்சியரிடம் பேசி இழப்பீடு வழங் கப்படும் என்று வட்டாட்சியர்கள் உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மணல் கொள்ளையைத் தடுக்க அனைத்துக்கட்சிகள் வலியுறுத்தல்
மானாமதுரை, ஜூன் 15- மானாமதுரை ஊராட்சி ஒன்றி யம் செய்களத்தூர், கல்குறிச்சி, முருகப்பஞ்சான் பகுதிகளில் நடந்துவரும் சட்டவிரோத மணல் கெள்ளையை தடுக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்டது. திமுக நகர் செயலாளர் பொன் னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஆண்டி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.வீரையா, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினர் முருகேசன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் செல்வராஜ், சிபிஐ நகர் செயலாளர் நாக ராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் என்.எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மணல். சவுடு அள்ளக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டரை அடி ஆழம் மட்டுமே அள்ளவேண்டுமென்ற கனிம வளத்துறை உத்தரவை மீறி பல இடங்களில் மணல் கொள்ளை தீவிரமாக (30அடி முதல் 50அடி வரை ஆழத்திற்கு மணல் அள்ளு கிறார்கள்). நடைபெறுகிறது. குறிப்பாக மானாமதுரை கல் குறிச்சி வைகை ஆறு ஒரமாக 30 அடி ஆழம் முதல் 50 அடி ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது. மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டுமென இக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
ஏலத் தோட்டங்களுக்கு செல்ல போடி மெட்டு வழியாக அனுமதி வழங்குக!
தேனி, ஜூன் 15- இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்ல போடி மெட்டு சாலை வழியாக அனுமதிக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட செயலா ளர் டி.கண்ணன் ,கே.செல்வராஜ் ஆகியோர் தேனி ஆட்சியர் பல் லவி பல்தேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் போடி மெட்டு பகுதியை ஒட்டிய பகுதிகளில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவ சாயிகள் ஏலம் சாகுபடி செய்து வருகிறார்கள். தற்போது இ. பாஸ் மூலம் அனுமதி பெற்று நிலத்தை அபிவிருத்தி செய்தும், காய்களை ஏல நிறுவனங்கள் மூலம் பதிவு செய்தும் வருகிறார் கள். இ-பாஸ் மூலம் 6 தினங்க ளுக்கு அனுமதி பெற்று போடி மெட்டு வழியாக சில நாட்கள் செல்ல அனுமதித்த காவல்துறை யினர் தற்போது குமுளி வழி யாக செல்ல வேண்டும் என கூறு கிறார்கள். குமுளி வழியாக சென்றால் சோதனை முடிய 4 மணி நேரம் வரை ஆகிறது. தோட்டத்திற்கு செல்ல 200 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள் ளது. போடி மெட்டு வழியே சென்றால் 45 நிமிடத்தில் தோட் டத்திற்கு சென்று விடலாம் எனவே போடி மெட்டு வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
கம்பம் உழவர் சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது
தேனி ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
தேனி, ஜூன் 15- கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து மூடப்பட்ட உழவர் சந்தையை பழைய இடத்திலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது . இது குறித்து கட்சியின் கம்பம் ஏரியா செயலாளர் ஜி.எம்.நாகராஜன், தேனி ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியி ருப்பதாவது: கம்பத்தில் உள்ள காந்திஜி பூங்கா அரு கில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தால் மூடப்பட்டது. இங்கு கூடலூர் ,கிழக்கு கிராமங்கள் ,இடுக்கி மாவட்டத்திலிருத்தும் காய்கறிகள் வாங்கி பயன் பெற்றனர்.தற்போது உழவர் சந்தையை கம்பத்திலி ருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாற்றியுள்ளனர். இதனால் காய்கறி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித் துள்ளது. பழைய இடத்தில 50 டன் விற்பனை நடைபெற்றது. தற்போது அது 2 டன்னாக குறைந்து விட்டது .குறிப்பாக பெண்கள் அங்கு வந்து காய்கள் வாங்க வருவதில் சிர மம் உள்ளது. மேலும் அந்த மைதானத்தில் எவ்வித அடைப்படை வசதியும் இல்லாமல் இருப்பதால் சிறு விவசாயிகள் ,மகளிர் சுய உதவி குழு பெண்கள், அதிகாரிகள் என பல ரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சமூக இடைவெளியுடன் பொது மக்கள், விவசாயிகள், சிறுவியாபாரிகள் நலன் கருதி காந்திஜி பூங்கா ,சிபியு பள்ளி வளாகம், கள்ளர் பள்ளி வளாகம், பழைய பேருந்துநிலையம் ,கம்மராய பெருமாள் கோவில் வளாகம் ,கோட்டை மைதானம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நக ராட்சி வாரச்சந்தை ஆகிய இடங்களில் ஏதே னும் ஒரு இடத்தில் உழவர் சந்தையை செயல் படுத்தலாம்என அந்தமனுவில் தெரிவித் துள்ளார்.