tamilnadu

மணலி சிவந்தி ஆதித்தனார் பெண்கள் பள்ளி ஹாட்ரிக்

சென்னை, ஏப்.20-சென்னை மணலியில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு மூன்றாவது முறையாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியானது. இதில் மணலியில் கடந்த அரை நூற்றாண்டாக இயங்கி வரும் இப்பள்ளியில் மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 50 விழுக்காடுக்கு மேல் 400மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கே.சந்திரமோகன், தலைமை ஆசிரியர் செல்வி, ஜோதி ஆகியோர் பாராட்டி இனிப்புகளை வழங்கினர். 

;