tamilnadu

img

மகளிர் உரிமை தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

காஞ்சிபுரத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திட்டத்துக்கான அறிவிப்பு இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது. இதை அடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இத்திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.16-ஆம் தேதி வரை மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் பயனடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.