tamilnadu

img

அரிக்கொம்பன் யானையை கேரளாவில் விட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

 அரிக்கொம்பன் யானையை கேராளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு.

கேரளாவில் இருந்து கம்பம் பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானையைப் பிடித்த வனத்துறை, அதனை திருநெல்வேலி மாவட்டத்த்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட்டது.அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதால், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் அரிசிக்கொம்பனை விடக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் யானையை எங்கு விட வேண்டும் என்பதை வனத்துறையினர் முடிவு செய்வர் என கூறி வழக்கினை தள்ளுபடி செய்தனர்.