கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா? மக்களின் வாக்குகளை பெற்றபின் அவர்களுக்கான திட்டங்கள் குறித்து கவனிப்பதில்லையா? என ஜூலை 24ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.