ப ாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத் தில் சட்டவிரோதமாக விற் கப்பட்ட மதுபானத்தை அந்த மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சி யங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல்நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மது பானங்கள் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் விளக்கம் தெரிவித்து, எலிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஒரு எலியையும் கைது செய்துள்ளதாகவும் வழக்கு விசா ரணையின் போது நீதிபதியிடம் எலியை சாட்சியாக காட்டியுள்ளனர். போலீசாரின் இந்த செயலால் நீதிமன்றத்தில் கடும் சிரிப்பலை ஏற்பட்டது.