சென்னை, ஜன. 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. கே. ரங்கராஜனின் சுயசரிதை நூலான “’தொடர் ஓட்டம்’ - டி.கே. ரங்கராஜன் வாழ்க்கை நிகழ்வு கள் - நினைவுகள்- சுயசரிதை’” வெளி யீட்டு விழா வியாழனன்று (ஜன.18) 47- ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி யில் நடைபெற்றது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி நூலை வெளியிட, சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் பெற்றுக் கொண்டார்.
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஆர்.கரு மலையான், மாநிலப் பொதுச்செயலா ளர் ஜி. சுகுமாரன், துணைத் தலைவர் ஆர். சிங்காரவேலு, மூத்த பத்திரிகை யாளர் மயிலைபாலு, பாரதி புத்தகாலயம் மேலாளர் க. நாக ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.