tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மீனவர்கள்  கடலுக்கு செல்லத்தடை

கடலூர், டிச.12- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவுகின்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக கடலில் 40 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கு கடல் மீன் பிடிப்பு மற்றும் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக புதன்கிழமை இரவுக்குள்  கரைக்கு  திரும்ப வேண்டும்,  விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் புதன் முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிதம்பரம், டிச. 11- சிதம்பரம் அருகே கடவாச்சேரி பாலம் பகுதியில் புதன்கிழமை(டிச.11) காலை  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 1.5 டன் புகையிலை பிடிபட்டது. இந்த கடத்தலில் மயிலாடுதுறை கொள்ளிடம்  ஆரோக்கியராஜ்,  தருமபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி  பச்சையப்பன், சேத்தியாத்தோப்பு  அருள்ராஜ் எரும்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,  அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   இந்த சம்பவத்தில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி மணி மகன் விஜய் தலைமறைவாகியுள்ளார்.

வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இவர் சிறையில் தற்போது உள்ளார்.  கைது செய்யப்பட்ட 5  பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் அவர்கள் போதை புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்தும் 2 நான்கு சக்கர மினி லாரிகள். 72 மூட்டைகள் கொண்ட 1.5 குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ 30 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

ராணிப்பேட்டை, டிச. 11 –  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த பெல்லியப்பா நகர் பகுதியில் வசிக்கும் வசந்தகுமார். இவர், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு ஈஷா ஆதித்யா, காவியா என இரண்டு மகள்கள். இதில், ஈஷா ஆதித்யா வாலாஜா அடுத்த சுமைதாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாயன்று (டிச. 10)  வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.   இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவியின் பெற்றோர் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்.

மாணவியின் உடலை, வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவி ஏற்கனவே இதயம் பலவீனமான நிலையில் சிகிச்சை பெற்று வந்ததும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.