சோழிங்கநல்லூர், ஜூலை 11- பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு எழில்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கே.பிளாக்கில் 6வது மாடியில் வசித்து வரும் பிரகாஷ் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5.5 சவரன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதேபோல், பிளாக்கில் 1-வது மாடியில் வசித்து வந்த ராஜா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 ஆயிரம் பணம், விலை உயர்ந்த 5 பட்டுப் புடவை களையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல் முதல் தளத்தில் வசிக்கும் கிரிஸ்டீனா என்பவர் வீட்டின் ஜன்னலை திறந்து ஜன்னல் வழியாக ஒரு செல்போனை திருடி இருக்கிறார்கள். முதல் தளத்தில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த தில் வீட்டில் எதுவும் கிடைக்காததால் பீரோவை சேதப்படுத்தி, கண்ணாடி யையும் உடைத்து சென்றுள்ளனர். 2-வது தளத்தில் வசிக்கும் மதுரை என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளனர். எப்.பிளாக்கில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுவே வசதி படைத்த வரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றி ருந்தால் காவல்துறை உயர் அதிகாரிகள், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் என முக்கியத்துவம் கொடுத்து புலன் விசாரணை மேற்கொண்டிருப்பார்கள் எனவும் பாதிக்கப்பட்ட வர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.