நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பகல் 12 மணி நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணிக்கட்சிகள் வெற்றியடைந்துள்ளது.
தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் உள்ள 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.