tamilnadu

img

பொங்கலுக்கு ரூ. 416 கோடிக்கு மது விற்பனை...

சென்னை:
தமிழ்நாட்டில்  இரண்டே நாட்களில் ரூ.416 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.போகிப் பண்டிகையான ஜனவரி 13ஆம் தேதி ரூ. 147 கோடி, பொங்கல் பண்டிகையான ஜனவரி 14 ஆம் தேதி ரூ. 269 கோடி என மொத்தமாக இரண்டு நாட்களில் 416 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால், மதுபானக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 200 கோடி ரூபாய்க்கு குறைவாக மதுபானம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, மூன்று நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
 

;